திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் சுமார் 10 ஆயிரம் பேரை தனது சொந்த ஊரான தண்டுபத்திற்கு வரவழைத்தார்.
அவர்களிடம், வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி 6-வது முறையாக தமிழக முதல்வராக வருவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தல் பணியை செய்ய வேண்டும்.
6-வது முறையாக கருணாநிதியை முதல்வராக்குவோம் என சபதம் செய்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி ஆகியோரின் வழிகாட்டுதலில் கட்சி பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பின்பு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு நபருக்கும் கழக தலைவர் படம் உள்ள தினசரி காலண்டர், 1/2 கிலோ அல்வா, வேட்டி- சட்டை, சேலை, ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கி மட்டன் பிரியாணி சாப்பாடு ஆகியவற்றை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
மொத்தம் 10 ஆயிரம் தி.மு.க.வினர் நீண்ட கியூவில் நின்று பரிசு பொருட்களை வாங்கி சென்றனர்
No comments:
Post a Comment