Pages

france

Wednesday, November 3, 2010

ஈழத்தில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்!(புகைப்படங்கள் )

யாழ்பாணத்தின் கரையோரப் பிரதேசங்களாகிய யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் கொழும்புத்துறையிலுள்ள மணியந்தோட்டம் ஆகிய இடங்களில் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை முடுக்கிவிடும் திட்டத்தில் இலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது.
முருகண்டியிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தவென வார்த்தெடுக்கப்பட்ட வீட்டுத் தொகுதிகளை சீன அரசாங்கம் ஏற்கனவே இலங்கைக்கு அளித்திருந்தது.

இவ்வாறான 12,000 வீட்டுத் தொகுதிகள் தற்போது முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வீட்டுத் தொகுதிகளைப் பொருத்தும் பணி நிறைவடைந்ததும் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் நடக்கவுள்ளது.





 

No comments:

Post a Comment