Pages

france

Tuesday, October 26, 2010

தேசியத்தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் மீதான வழக்குகளை இந்திய நீதித்துறை கைவிட்டது.


PP
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் வழக்குகளை மூடுவதாக இந்திய நீதித்துறை அறிவித்துள்ளது. இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்றதாகவோ, மறுப்பதாகவோ இந்திய அரசு தெரிவிக்காமலிருந்தது. ஆனால் இப்போ அவர்கள் இருவரும் இல்லை என்ற கருது கோளில்  அவர்கள் மீதான வழக்கை மூடுவதாக அறிவித்துள்ளது.

சிபிஐயின் இணையத் தளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில்,

"முதன்மைக் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment