ஈழதேசம் : ஐயா, வணக்கம். நீங்கள் அடிக்கடி அல்ல, எப்பப் பார்த்தாலும் 'திராவிடக் கொள்கை', 'திராவிடம்' என்று சொல்லி வருகிறீர்கள், மேலும் 'பெரியார், அண்ணா' கற்றுக் கொடுத்த பாடங்கள் என்று வேறு சொல்லி வருகிறீர்கள். அப்படி என்ன அந்த இருவரும் சொல்லிக் கொடுத்தார்கள் உங்களுக்கு ?


மு.க. : அதுதான் முன்னேயே சொன்னேனே, பிறகு திரும்ப திரும்ப கேட்கிறாய். ( இடையில் குறுக்கிட்ட ஈழதேசம் ஒரு வரி பதிலாக சொன்னீர்கள், எனக்கு புரியவில்லை என்றவுடன், சரி சரி விபரமாக சொல்கிறேன் அறிந்துகொள் என்றார். ) அதுக்குத்தான் சொல்வது அண்ணா எழுதிய நூல்களை படிக்க வேண்டும் என்பது. அல்லது குறைந்த பட்சம் முரசொலி படிக்க வேண்டும். அறிவு வளரும் அரசியல் வளரும். வரலாறு தெரியும்.