Pages

france

Thursday, December 30, 2010

தமிழா!! விழிப்பாயிரு நெருப்பாயிரு-சங்கிலியன்

imagesதமிழா!! பரந்த உலகில் பிரிந்து வாழும் புலம்பெயர் தமிழா!!
பயங்கரவாதம் பயங்கரவாதிகள் என சாயங்கள் பூசிய சிங்களன்
வேட்டைநாய் கூட்டதுடன் உன் உறவுகளை கொன்றொழித்து
களம் நின்ற தமிழன் கையிலும் விலங்கிட்டு

ஈழம் என்ற சொல்லை உச்சரிக்கவும் தடைவிதித்து
அட்டகாசம் செய்து. ஏன் என்று கேட்பதற்கு தமிழன்
தரங்கெட்டுபோனதாய் மமதைகொன்டு உலகெங்கும்
மாவீரன் நானென்று பிதற்றுகிறான்

வாழ்விழந்து போனாலும் செந்தமிழ் வலுவிழந்துபோகாதென்று
முழங்கி நிற்கும் புலத்தமிழா!! உன் குரல்கள் சிங்களனை பீதியில்
ஆழ்த்துதடா பீதிகொண்ட சிங்களன் அலைகடல் ஓடினும்
தமிழனை கொல்வோம் என விரட்டுகிறான் தமிழனை
குடிகெடுக்கும் கோடாலிக்காம்பாக சிங்களன் பக்கத்தில்  சீர்
கெட்ட தமிழர் சிலர்
சிங்களன் சில்லறைக்காய் காட்டிக்கொடுத்துவிட்டு கூட்டியும்
கொடுக்கின்றான்

ஈழத்தின் அவலத்தை வெளிச்சமிடும்
இணையங்களும் சத்தமிடும்  உன் குரல்களும்  அவன் எதிரியாய்
போனதடா ,,,,,,,,,,,,,,,

அன்றொருநாளில் பென்னியின்செல்வன் மாறினான் ராஜராஜசோழனாய்
அவன் மட்டும் விழவிலை வீழ்ந்தது செந்தமிழின்  தலையிலும் இடி
மாய வலைவிரித்து உன் மார்பில் வேல்பாய்ச பாசத்துடன் பழகி
நீ படுத்துறங்கும் நேரம் பார்த்து பறாங்கல்லை போடுவான் உன் தலையில்
நடுக்காட்டில் பள்ளம் வெட்டி அறுகம்புல்லும் ஆலமிலையும்
போட்டுவைப்பது யானை வந்து பசியாறவல்ல
மாய வலைகளில் மாண்டு போய்விடாதே,,,,,,,,,,,,,,

விடுதலை தாகம் கொண்ட உனக்கு சிங்களனும் அவன் கூலிக்கும்பலும்
இணையங்கள் மூலம் உறவாடி உன் முன்னேற்றப்பாதைக்கு தடைபோட
காத்திருக்கிறான்

இணையத்தில் காமப்பாடம் நடத்தி சுதந்திரப்பசி கொண்ட உன்னை
கட்டில் சுகதிற்கு அலையவிட்டு தொட்டிலில் துயிலும் உன் பிள்ளை
உயிரெடுக்க வழிவகை செய்கின்றான் உன் எதிரி
எதிரி வேறெங்கும் இல்லை உன்போல தேசியம் போசுகிறான்
உன்னை நாசம் செய்ய காத்திருக்கிறான்  காலம் பார்த்து கழுத்தறுப்பான்
உறங்கியபோதும் கண்களை மூடாதே  புடரிக்குப்பின்னும் ஒரு
கண்ணை பதித்துவை  துட்டனைக்கண்டால் தூரம் போகாதே
அவனை துரத்திப்போ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நெருப்பாயிரு தமிழா
விழிப்பாயிரு தமிழா விழிப்பாயிரு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment