Pages

france

Monday, November 1, 2010

அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் இணைத்தளங்களை முடக்க அரசாங்கம் உத்தரவு

srilanka blog media
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும் சிறிலங்கா அரசுக்கும், மஹிந்தவிற்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்தி களை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடைசெய்திருந்தது.

புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களையும் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசுக்கும் சிறி லங்கா அதிபருக்கும் எதிரான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் மீது தடையை நடைமுறைப்படுத்தும் நடவடிக் கைகளை பகிரங்கமாகவே மேற் கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு திட்ட மிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment